Sunday, October 10, 2010

பிரியாத வரம் வேண்டும்...

நட்பும் காதலும் இருவிழிகள்... 
இங்கே, ஒரு விழி போதுமென்றால், உன் வழியில் தெளிவில்லை... 
இரு விழியும் வேண்டுமென்றால், என்னோடு கைகோர்த்து நட, 
இருவிழியைக் கொண்டு, ஒருவழியில் நடப்போம்.....



பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை
நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை
தூராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று

ஒரு வரி நீ ஒரு வரி நான்
திருக்குறளால் உன்னை சொன்னேன்
தனித்தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே
உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கைக்குட்டை
நீ தொட்ட அடையாளம் வடிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போனேன்
பிரிவில் நானே நீயாய் ஆனேன்

கீழ் இமை நான் மேலிமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேலிமை நீ பிரிந்ததனால் புரிந்து கொண்டேன் காதல் என்றே
நான் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேன்
உள்ளம் எங்கும் நீயே நீயே பிரிவின் தாகம் காதல் தானே


பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று

No comments:

Post a Comment